முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் தாசரி நாராயணராவ், மதுகோடாவுக்கு ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 22 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் தாசரி நாராயண ராவ், மதுகோடா உள்பட 15 பேருக்கு சிபிஐ கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மத்தியில் இருந்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் தொழில் அதிபருமான நவீன் ஜிண்டாலுக்கு ஜார்க்கண்ட் மற்றும் ஓடிசா மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக அப்போதைய நிலக்கரித்துறை அமைச்சர் தாசரி நாராயணராவ், ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா, நிலத்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா, தொழில் அதிபர் நவீன் ஜிண்டால் உள்பட 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் அனைவரும் ஜாமீன் கேட்டு சிபிஐ விசேஷ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

நேற்று தாசரி நாராயணராவ், மதுகோடா, நவீன் ஜிண்டால், எச்.சி.குப்தா உள்பட 15 பேர் ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைவருக்கும் ஜாமீன் வழகங்கி நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட்டு அனுமதி இல்லாமல் அவர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்று தலா ரூ.1 லட்சம் பணயப்பத்திரம் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து