முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியார் , அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்

வெள்ளிக்கிழமை, 22 மே 2015      தமிழகம்
Image Unavailable


சென்னை - முதல்வராக பதவியேற்க இருக்கும் ஜெயலலிதா பெரியார், அண்ணா , எம்.ஜி.ஆர் உருவப்படங்களுக்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து பிரம்மாண்ட வரவேற்பளித்தனர். அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா இன்று மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கிறார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி சென்னை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சென்னை கடற்கரை காமராஜர் சாலையே கொடிகளும் தோரணங்களும் பதாகைகளும் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வருக்கு தமிழகமே திரண்டு உற்சாக வரவேற்பளிக்கும் வகையில் அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் எம்.ஜி.ஆர் ஆகியோரது சிலைகளுக்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக சென்னை போயஸ்கார்டனில் இருந்து மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆளுநரை சந்திப்பதற்காக நேற்று பகல் 1-30 மணிக்கு புறப்பட்டார். அவரை அதிமுக மகளிர் அணி செயலாளர் சசிகலா புஷ்பா, கவுன்சிலர்கள் ஆர்.கே. நகர் அஞ்சுலட்சுமி, வேளாண்கண்ணி ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் ஜெயலலிதாவுக்கு பூர்ண கும்ப மரியாதையளித்து வரவேற்றனர். ஜெயலலிதா சென்ற வழியெங்கும் அதிமுக தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர். இதைத்தொடர்ந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவிக்க வந்த அவரை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் , மற்றும் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், உதயகுமார், வளர்மதி , எம்.எஸ்.எம். ஆனந்தன், விஜயபாஸ்கர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கே.சி.வீரமணி அப்துல் ரஹீம் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா தந்தை பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அண்ணா சாலை ஸ்பென்சர் அருகே அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த எம்ஜி.ஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆர் சிலை அருகே ஜெயலலிதாவை வரவேற்க கடல் போல் அதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். வழியெங்கும் அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அண்ணா சாலையே அம்மாவை வரவேற்க திரண்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஜெயலலிதாவை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் , அமைச்சர்கள் தங்கமணி, மோகன், அரசு கொறடா மனோகரன், புதுடெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே ஜக்கையன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா, எம்.எல்.ஏக்கள் செங்கோட்டையன், வைகைச்செல்வன், ,விஜயலட்சுமி பழனிச்சாமி, சண்முகவேல் ,முத்துச்செல்வி ஜெயகுமார், அதிமுக எம்.பி ரபி பெர்னாட், ஆகியோர் உள்ளிட்ட அதிமுகவினரும் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று வரவேற்றனர்.இதன்பின்னர் சென்னை அண்ணாசாலையில் அண்ணாசிலைக்கு அருகே உள்ள அண்ணா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜெயலலிதாவை வழியெங்கும் மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.

வழியெங்கும் செண்டை மேளங்கள் முழங்கின. அம்மா வாழ்க புரட்சித்தலைவி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர் புரட்சித்தலைவி வாழ்க என்று தொண்டர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். கிட்டதட்ட சென்னை மாநகரமே திரண்டு வந்தது போல் ஜெயலலிதா சென்ற வழியெங்கும் அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து