எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
வழக்கில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று காலை 7 மணிக்கு ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
முதலவர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உட்பட 144 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா , அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் அறிந்த தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பி மகிழ்ந்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க அவர் கட்சித்தலைவர் ஆனதை வரவேற்றனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் நேற்று அதிகாலை 7 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க நேற்று அதிகாலை 5.45 மணிக்கே எம்.எல்.ஏக்கள் வரத்தொடங்கினர். 6.25 மணிக்கு முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வந்தார். அவரை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் 144 பேரும் வந்தனர் .காலை 7 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் எழுந்து அதிமுக சட்டமன்றக்கட்சித்தலைவராக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா பெயரை முன்மொழிந்தார். அதனை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வழிமொழிந்தார். உறுப்பினர்கள் அனைவரும் இத்தீர்மானத்தை வரவேற்று பலத்த கரவொலி எழுப்பினர். புரட்சித்தலைவி அம்மா வாழ்க என வாழ்த்துக்கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்ற அதிமுக அலுவலகத்தில் பல்லாயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். அதிமுக சட்டமன்றக்கட்சித்தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் அறிந்ததும் தொண்டர்கள் அம்மா வாழ்க முதல்வர் புரட்சித்தலைவி வாழ்க என வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.பேண்ட் வாத்தியங்கள் முழங்கின. ஆண்களும் பெண்களும் நடனமாடி ஜெயலலிதா சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதற்கிடையில் அதிமுக தலைமைக்கழகம் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று அதிகாலை 7 மணிக்கு நடைபெற்றது., அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றதுகூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றக் கட்சியின் தலைவராக, கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் கழக சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை, அவரிடம் சொல்வதற்கு முதல்வர் பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் சென்றார்.
போயஸ்கார்டனில் ஜெயலலிதா சந்தித்த பன்னீர்செல்வம், பின்னர் அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ஆளுநர் ரோசய்யாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை பன்னீர்செல்வம் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக முதலமைச்சராக பதவியேற்க வருகை தரும்படி மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் , மக்களின் முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஒ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மீண்டும் முதல்வராக பதவியேற்க ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.
ஆளுநரின் அழைப்பை ஏற்று கிண்டி ராஜ்பவன் புறப்பட்ட ஜெயலலிதாவுக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போயஸ்கார்டனே கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு நேவிழாக்கோலம் பூண்டிருந்தது. அதிமுக மகளிர் அணி செயலாளர் சசிகலா தலைமையில் மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.கவுன்சிலர் ஆர்.கே.நகர் அஞ்சுலட்சுமி, குழந்தைகள் உரிமை ஆணையத்தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, சைதை எம்.எல்.ஏ செந்தமிழன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தி வரவேற்றனர். . பேண்டு வாத்தியங்கள் முழங்க ,அம்மா வாழ்க என்று வாழ்த்து கோஷங்கள் முழங்கின.
. இதற்கிடையே நேற்று பகல் 1-33 மணிக்கு கிண்டி ராஜ்பவன் சென்றார். ஆளுநர் மாளிகையில் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா , ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.ஆளுநர் ரோசய்யாவிடம் அமைச்சரவை பட்டியலையும் ஜெயலலிதா வழங்கினார். இதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா , சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
போயஸ் தோட்டத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரையிலும் அண்ணா சாலையிலும் வழிநெடுக ஜெயலலிதாவை வரவேற்று தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா செல்லும் பாதைகளில் நேற்று முன்தினம் மாலை முதலே போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். எம்ஜிஆர், அண்ணா, பெரியார் சிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பொறுப்பேற்க உள்ளார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடக்கிறது. காலை 11 மணிக்கு தொடங்கி 12 மணிக்குள் விழா முடிவடையும். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசய்யா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விழா முடிந்ததும் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.