முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களிடம் சிக்கிய ரஜினி

சனிக்கிழமை, 23 மே 2015      சினிமா
Image Unavailable

சென்னை - முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் வந்திருந்தார். பின்னர் விழா முடிந்து திரும்பிய அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் வந்ததால் ரசிகர்களிடம் இருந்து உடனடியாக அவரால் வெளியேற முடியவில்லை. இதனால், கூட்டத்தில் அவர் சிக்கி தவித்தார்.

இதை தொடர்ந்து நடிகர் சரத்தகுமார், ரஜினிகாந்தை சூழ்ந்திருந்த ரசிகர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், ரசிகர்கள் கலைந்து செல்லவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு சரத்தகுமார் மற்றும் சிலர் ரஜினியை ரசிகர்களிடமிருந்து மீட்டு காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ரஜினிகாந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த சம்பவம் விழா நடந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து