முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1078 சப்–இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு 1½ லட்சம் பேர் தேர்வு எழுதினர்

சனிக்கிழமை, 23 மே 2015      தமிழகம்

சென்னை - தமிழக காவல் துறையில் காலியாக இருக்கும் 1078 சப்–இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தேர்வை அறிவித்தது.இந்த தேர்வில் பங்கேற்க 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முதற்கட்டமாக இவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் 135 மையங்களில் தேர்வு நடந்தது. இதில் சென்னையில் மட்டும் 26 இடங்களில் நடந்தது. நேற்றுகாலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடந்தது. இளைஞர்கள் ஆர்வமுடன் தேர்வை எழுதினார்கள்.

காவல்துறை ஒதுக்கீட்டுதாரர்களுக்கு இன்று (ஞாயிறு) எழுத்து தேர்வு நடக்கிறது.அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வருபவர்கள் சிரமமின்றி தேர்வு மையங்களுக்கு பயணம் செய்ய தேர்வு மையங்கள் வழியாக செல்லும் மாநகர பஸ்களில் அறிவிப்புகள் ஒட்டப்பட்டு இருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து