முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிகாரிகள் - தலைமை செயலக ஊழியர்கள் உற்சாக வரவேற்பு

திங்கட்கிழமை, 25 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - நேற்று பிற்பகல் தலைமை செயலகத்துக்கு வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிகாரிகள் - தலைமை செயலக ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைமை செயலகத்துக்குள் முதல்வர் ஜெயலலிதா வந்தபோது நூற்றுக்கும் மேற்பட்ட தலைமை செயலக பெண் ஊழியர்கர் அவரை பூத்தூவி வரவேற்றனர். பின்னர் தலைமைச்செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதே போல் தமிழக காவல்துறை தலைவர் அசோக்குமார், முன்னாள் டி.ஜி.பி ராமானுஜம், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரும் முதல்வர் ஜெயலலிதாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  இதனை தொடர்ந்து தனது அறைக்கு சென்று முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தனது அலுவல்களை துவக்கினார். அதன் பின் 28 அமைச்சர்களும் தத்தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து