முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப்பிரதேசத்தில் ரயில் கவிழ்ந்தது ஒருவர் பலி

திங்கட்கிழமை, 25 மே 2015      இந்தியா
Image Unavailable

கவுசாம்பி -  உத்தரப்பிரதேசத்தில் நேற்று ஒருரயில் கவிழ்ந்தது இதில் 8ரயில் பெட்டிகள் தடம்புரண்டன.இந்த விபத்தில் ஒருவர் பலியானார் 6பேர் காயம் அடைந்தார்கள். ஜம்மு தாவிக்கு சென்று கொண்டிருந்த மியூரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கவிழ்ந்தது. இந்த ரயில் சிராத்து அட்சராய் ரயில் நிலையங்களுக்கு இடையே கவிழ்ந்ததுஎன வடக்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி விஜய குமார் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஒருவர் பலியானார் சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.அந்த இடத்திற்கு மருத்துவ குழுவும் மீட்புக்குழு அடங்கிய ரயில் சென்றது.விபத்து நடந்த இடத்திற்கு வடக்கு மத்திய ரயில்வேயின் தலைமை பொது மேலாளர் விரைந்தார். விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். இந்த ரயில் விபத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ளுமாறும் மாநில தலைமைச்செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து