முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓராண்டில் பாஜக ஆட்சி மீது ஊழல் புகார் எதுவும் இல்லை: அமித்ஷா பேட்டி

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஓராண்டில் பாஜக ஆட்சி மீது ஊழல் புகார் இல்லை என்று அமித்ஷா கூறினார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு பெரும்பான்மையுடன் அமைந்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் மாண்பை மோடி அரசு நிலை நிறுத்தி உள்ளது. ஏழைகளுக்கு மோடி அரசு ஒரு ரூபாய் தவணையில் விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதேபோல் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மோடி அரசின் திட்டங்கலை உலக வங்கி பாராட்டியுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்துக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது. கொள்கை முடக்கம் இந்த ஆட்சியில் இல்லை. பாஜ ஆட்சியின் ஓராண்டை நிறைவில் ஒரு ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளால் கூறமுடிய வில்லை. மத்திய அரசுக்கும் டெல்லி மாநில அரசுக்கும் இடையேயான மோதல் அரசியல் சட்டப்பிரிவுகளால் ஏற்பட்டது. விரைவில் அது கோர்ட்டு மூலம் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து