முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 38 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      உலகம்
Image Unavailable

பெய்ஜீங் - மத்திய சீனாவில் ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.  இச்சம்பவம் குறித்து சீன செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் , மத்திய சீனாவின் பிங்டிங்ஷான் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை.

இந்த விபத்தில் 38 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  தீ விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, என்று  தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து