முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிக்கி பாண்டிங்கிடம் ஏராளமான பாடம் கற்றேன்: ரோகித் சர்மா

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை - ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக கைப்பற்றியது.  சென்னை அணியை 41 ரன்கள் வித்தியாச்ததில் வீழ்ததி மும்பை அணி இந்த கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது தொடர்பாக மும்பை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: ஐபிஎல் கோப்பையை வீரர்களின் கூட்டு முயற்சியால் வென்றோம். மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்கின் பங்கு முக்கியத்துவம் பெற்று இருந்தது. அவரிடம் இருந்து நான் ஏராளமான பாடம் கற்றேன்.

ஆஸ்திரேலிய கேப்டனாக பணியாற்றிய அவர் பயிற்சியாளர் பதவியில் அற்புதமாக செயல்பட்டார். அவரது ஆலோசனை மிகப்பெரிய உதவியாக இருந்தது. நாங்கள் தொடக்கத்தில் தோல்வியை தழுவியபோது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளித்தார். தனிப்பட்ட வீரருக்கு அல்லாமல் அணியில் உள்ள ஒவ்வொரு வருக்கும் அவர் ஆலோசனை களை வழங்கினார்.  கேப்டன் பதவியில் எனது பங்களிப்பு சிறப்பாக இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து