எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் ரூ.20.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 226 காவல் துறை குடியிருப்புகளையும் தமிழகம் முழுவதும் இதே போன்று காவல் துறை, தீயணைப்புத்துறைக்கும் ரூ.423.50 கோடி மதிப்பீட்டில் கட் டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டிடங்களையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்ற நிகழ்வுகளைக் கண்டுபிடிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்தைச் சீர்படுத்துவது, இயற்கை இடர்பாடுகளின் போது மீட்புப் பணிகளை மேற்கொள்வது போன்ற இன்றியமையாப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் மேலும் சிறக்கும் வகையில் புதிய காவல் நிலையங்களைத் தோற்றுவித்தல், காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், காவல் துறை குடியிருப்புகள் கட்டுதல், காவல் கண்காணிப்பிற்காக புதிய ரோந்து வாகனங்களை வாங்குதல் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 226 காவல் துறை குடியிருப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 27 மாவட்டங்களில் 321 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3918 காவல்துறை குடியிருப்புகள் சென்னை, எழும்பூரில் 31,335 சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 8 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும அலுவலகம்; சென்னை மாநகரிலுள்ள மதுரவாயல் மற்றும் மடிப்பாக்கம், மதுரை மாநகரிலுள்ள விளக்குத் தூண், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாயல்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் 26 மாவட்டங்களில் 31 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடலோர காவல் நிலையங்கள் உள்ளிட்ட 68 காவல் நிலையங்கள்
சென்னை மருதம் வளாகத்தில் அமைந்துள்ள தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (பாதுகாப்பு பிரிவு) கூடுதல் தளம், சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதான வளாகத்தில் பயிற்சி மையம் மற்றும் தங்குமிடங்கள், திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஆயுதப்படைக்கு நிர்வாக அலுவலகங்கள்; புழல், மதுரை, இராமநாதபுரம் மாவட்டம் - கமுதி ஆகிய இடங்களில் காவல் ஆளிநர்களுக்கான தங்குமிடங்கள்; அரியலூர், கோயம்புத்தூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் காவல் பல்பொருள் அங்காடி கட்டடங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் 50 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை கட்டடங்கள்;காஞ்சிபுரம் மாவட்டம் - திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம்- செங்கம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர், கடலூர் மாவட்டம் - பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம், திருப்பூர் மாவட்டம் - பல்லடம் உட்பட பல இடங்களில் 11 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 130 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகள்;தஞ்சாவூரில் 8,344 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஒரு தளத்துடன் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகக் கட்டடம் என மொத்தம் 444 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சென்னை, மாம்பலம் பகுதியில் வியாபார நிறுவனங்கள் அதிகமாக செயல்பட்டு வருவதாலும், தென்மாவட்டங்களிலிருந்து வரும் விரைவு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதாலும், மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே போன்று ராஜீவ்காந்தி சாலையில் அதிகளவில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் திருவான்மியூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதாலும், மேற்படி இரண்டு ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மாம்பலம் மற்றும் திருவான்மியூர் ரயில் நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு ரயில்வே காவல் நிலையங்கள்;
காஞ்சிபுரம் மாவட்டம் - செய்யூர், ஈரோடு மாவட்டம் - சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் - அவினாசி, கோயம்புத்தூர் மாவட்டம் - அன்னூர், நாகப்பட்டினம் மாவட்டம் - திருமருகல், புதுக்கோட்டை மாவட்டம் - கீரமங்கலம், மதுரை மாவட்டம் - அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்; கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்படும் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகம் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சென்னை மாநகர காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக 52 பொலீரோ ஜீப்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு அனைத்து இடங்களிலும் இலகுவாக செல்லும் 12 வாகனங்கள் என மொத்தம் 5 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 64 வாகனங்களை வழங்கும் அடையாளமாக முதலமைச்சர் ஜெயலலிதா ஐந்து காவல்துறை ஓட்டுநர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே. ராமானுஜம், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் அசோக் குமார், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் / காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆர்.சி. குடாவ்லா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.