முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்- தலா ரூ.3 லட்சம் ரூபாய் நிதியுதவி.

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை,  மே 27: பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின்  குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்ததுடன், தலா ரூ. 3 நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கோயம்புத்தூர் மாவட்டம்,மகாலிங்க புரம் காவல்நிலையத்தில்சிறப்புஉதவிஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த  சு.லட்சுமணன்  உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்; சென்னை பெருநகர காவல், திருவான்மியூர் காவல்நிலையத்தில்சிறப்புஉதவிஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த  மாசிலாமணி  மாரடைப் பால் காலமானார் என்ற செய்தியையும்;
சென்னை பெருநகரகாவல், கொரட்டூர் காவல்நிலையத்தில், சிறப்புஉதவிஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த   சிலோர்மணி உடல்நலக் குறைவால்காலமானார் என்றசெய்தியையும்; திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகரகாவல்நிலையத்தில்சிறப்புஉதவிஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த  ரகுநாதன்  உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்; தருமபுரிமாவட்டம், மொரப்பூர் காவல்நிலையத்தில்சிறப்புஉதவிஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த   ராஜசேகர்  தனது இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது  ஜடையம்பட்டி பேருந்துநிறுத்தம் அருகே சாலையோர மரத்தின் மீது  மோதியதில்பலத்த காயமடைந்துமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார் என்றசெய்தியையும்; மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல்நிலையத்தில் சிறப்புஉதவிஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த  பொருட்செல்வம்  மாரடைப்பால்காலமானார் என்றசெய்தியையும்;பெரம்பலூர் மாவட்ட ஆயுதப் படைபிரிவில், இரண்டாம் நிலைகாவலராகப் பணி புரிந்துவந்த  நிர்மலா திருச்சிராப்பள்ளி- பெரம்பலூர் சாலையில்ஏற்பட்டசாலை விபத்தில் பலத்த காய மடைந்து மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார் என்றசெய்தியையும் அறிந்து   நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காவல் துறைசிறப்புஉதவிஆய்வாளர்கள் லட்சுமணன், மாசிலாமணி,  சிலோர்மணி, ரகுநாதன்,  ராஜசேகர்,  பொருட்செல்வம், இரண்டாம் நிலைக் காவலர்  நிர்மலாஆகியோரின்  அகாலமரணத்தால்சொல்லொணாத் துயரத்தில்ஆழ்ந்திருக்கும் அவர்களதுகுடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்தகாவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரணநிதி யிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய்வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து