முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை கடந்த 17-ம் தேதி ராஜினாமா செய்தார். வெற்றிவேலின் ராஜினாமாவையடுத்து காலியாகியுள்ள ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., தொகுதியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடையே உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் ஜூன் மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகின்றது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 10-ம் தேதி கடைசி நாள். ஜூன் 27-ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 30-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து