முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு : காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

புதன்கிழமை, 27 மே 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - டெல்லியில் நேற்று முன்தினம் கிஸான் டிவி சேனல் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் பேசுகையில், இந்த நாடு இந்துஸ்தான். இது ஒன்றும் இத்தாலி கிடையாது. இங்கு இருக்கும் விவசாயிகளுக்கு நீண்ட காலமாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்று மறைமுகமாக சோனியாவை தாக்கி பேசினார்.

மேலும் அவர் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசுகையில், கடந்த 67 ஆண்டுகளாக இந்த நாட்டின் ஆட்சி அவர்கள் கையில் தான் இருந்தது. தற்போது பிரதமர் மோடி வந்த பிறகுதான் விவசாயிகளுக்கான டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு எதிரானவர் என்பதுபோல அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்களது நிலம் மற்றும் விவசாயம் குறித்து தெரிந்து கொள்வதற்கான பொற்காலமாக கிஸான் டிவி தொடங்கப்பட்டுள்ளது. 

மக்கள் தொகை பெருகிவரும் இந்த காலகட்டத்தில் வேளாண் உற்பத்தி பொருட்களை மேலும் அதிமாக உற்பத்தி செய்ய வேண்டிய சவால் நம்முன் உள்ளது என்று பேசினார். பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் மறைமுகமாக சோனியாவை அமவமதித்து பேசிய விவகாரம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து