முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மேற்கொள்ளும் வளர்ச்சி திட்டங்களில் காங்கிரஸ் தடை ஏற்படுத்துகிறது : வெங்கய்யா நாயுடு குற்றச்சாட்டு

புதன்கிழமை, 27 மே 2015      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர் - பாஜதலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொள்ளும் திட்டங்களின் வளர்ச்சியில் காங்கிரஸ் தடை ஏற்படுத்துகிறது. அந்த கட்சி தவறான தகவல்களையும் பரப்பி வருகிறது என நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான வெங்கய்யா நாயுடு குற்றம் சாட்டினார். அமைச்சர் வெங்கய்யா நாயுடு நேற்று புவனேஷ்வரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு மேற்கொள்ளும் வளர்ச்சி திட்டங்களில் காங்கிரஸ் அரசு தடை ஏற்படுத்துகிறது. மேலும் நில மசோதா தொடர்பாக தவறான தகவல்களையும் அந்த கட்சி பரப்பி வருகிறது.காங்கிரஸ் பரப்பி வரும் சதிதிட்டங்களுக்கு எதிர் கட்சிகள் செவி சாய்க்கக்கூடாது, மேலும் மத்திய அரசு மேற்கொள்ளும் வளர்ச்சி திட்டங்களுக்கும் எதிர்கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்றும் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து