முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் 2-வது சுற்றில் சாய்னா, ஸ்ரீகாந்த்

வியாழக்கிழமை, 28 மே 2015      விளையாட்டு
Image Unavailable

சிட்னி - ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி கண்டு 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான சாய்னா தனது முதல் சுற்றில் 21-12, 21-10 என்ற நேர் செட்களில் மலேசியாவின் சியே லிடியாவை தோற்கடித்தார்.

சாய்னா தனது 2-வது சுற்றில் சீனாவின் சன் யூவை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 21-18, 15-21, 23-25 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் இகனிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.  ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஸ்ரீகாந்த் 14-21, 21-8, 22-20 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஹான்ஸ் கிறிஸ்டியானை தோற்கடித்தார்.

அடுத்த சுற்றில் சீனாவின் டியான் ஹுவெயை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த். அதேநேரத்தில் இந்தியாவின் காஷ்யப், குருசாய் தத் ஆகியோர் முதல் சுற்றோடு வெளியேறினர்.  மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-13, 21-13 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் சமந்தா பார்னிங்-ஐரிஸ் டேப்ளிங் ஜோடியைத் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து