முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருஞான சம்பந்த குரு பூஜை மதுரை ஆதீனத்தில் 5 நாள் நடக்கிறது

வியாழக்கிழமை, 28 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை: மதுரை ஆதீனத்தை 2500ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவியருளிய திருஞான சம்பந்த பெருமான் குருபூஜைப்பெரு விழா 5நாட்கள் மதுரை ஆதீனத்தில் நடக்கிறது. சைவ சமயக்குரவர் நால்வரில் முதல்வரும் தமிழ் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவருமான திருஞான சம்பந்த பெருமானின் குரு பூஜை பெரு விழா மே மாதம் 31ம் நாள் ஞாயிறு அன்று விநாயகர் பூஜையுடன் ஆரம்பமாகிறது. மறுநாள் ஜூன் 1ம் நாள்திங்கட்கிழமை முருகப்பெருமான் பூஜையும் ஜூன் 2ம் நாள் செவ்வாய்கிழமை திருஞான சம்பந்த பெருமான் திரு அவதாரம் செய்த திருநாளும் நடைபெறுகிறது.

அன்று காலை 11மணியளவில் திருஞான சம்பந்த பெருமான ஆதீன முகப்பிற்கு எழுந்தருளி திருக்கண் சாத்துதல் நடைபெறுகிறது. ஜூன் 3ம் நாள் புதன் கிழமை காலையில் ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து ஆதீன முகப்பிற்கு எழுந்தருளி திருக்கண் சாத்திய பின் ஆதீனத் திருமடாலயத்தில் திருஞான சம்பந்த பெருமான்ன ஞானப்பால் அருந்தும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மறுநாள் ஜூன் 4ம் நாள் அதிகாலை 4மணிக்கு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கோவில் இணை ஆணையர்,உதவி ஆணையர் கண்காணிப்பாளர்கள்,பேஷ்கார்,சிவாச்சார்யார்கள்,யானை,ஒட்டகம் மேள தாள பரிவாரங்களுடன் ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் அவர்களை திருக் கோவிலுக்கு அழைத்துச்செல்கிறார்கள். அங்கு அனைது சன்னதிகளிலும் அர்ச்சனை செய்யப்பெற்று சன்னிதானம் தரிசனம் செய்கிறார்கள். பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் திருஞான சம்பந்த பெருமானுக்கு அலங்காரங்கள் செய்வித்து தீபாராதனை செய்யப்பெற்று ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து மதுரை ஆதீனக் கொலு மண்டபத்தில் திருஞான சம்பந்த பெருமான் எழுந்தருளி திருமறை,வேத பாராயணங்களுடன் சிறப்பு பூஜை நிகழ்கிறது.

அதன் பின்னர்ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருகோயிலில் இருந்து 63நாயன்மார்கள் அடங்கிய சப்பரங்கள் மதுரை ஆதீன முகப்பிற்கு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அதன் பின்னர் திருஞானசம்பந்த பெருமானையும் 63நாயன்மார்களையும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு வழி அனுப்பி வைத்து விட்டு ஆதீன திரு மடாலயத்தில் ஸ்ரீ லஸ்ரீ குரு மகா சன்னிதானம் வைகாசி மூலக்குரு பூஜைக்கு எழுந்தருளுகிறார்கள். அங்கு மிகப்பெரிய சிறப்பு பூஜை நடைபெறும். திருஞான சம்பந்தப்பெருமான் தனது துணைவியார் தோத்திர பூரணாம்பிகையோடு தம்மை உணர்ந்து வாழ்ந்த உண்மை சீடர்கள் சிலரோடும் சிவஜோதியில் ஐக்கியம் ஆகின்றார்கள். அதன் பின்னர் ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் எல்லோருக்கும்  ஆசிர்வாதம் வழங்கி மாகேஸ்வர பூஜையில் கலந்து கொள்ள ஆணை பிறப்பிக்கிறார்கள்.

இரவு 7மணிக்கு மீண்டும் ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் அவர்கள் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அக்காலத்தில் சின்ன மருது பெரிய மருது சகோதரர்களால் வழங்கியுள்ள பெரிய வெள்ளி கோ ரதத்தில் திருஞான சம்பந்தப்பெருமானை எழுந்தருளச்செய்து மின் அலங்காரங்கள் செய்த வெள்ளி கோ ரதத்தை ஆவணி மூல வீதி வழியாக எழுந்தருளச்செய்து அங்கு சிறப்பு  பூஜைகள் நடைபெற்று எல்லோருக்கும் ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் அவர்கள் நல்லாசி வழங்குகிறார்கள். இத்துடன் திருஞான சம்பந்தப்பெருமான் ஆண்டு குரு பூஜை நிறைவுறுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து