முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் உள்பட 74 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      இந்தியா
Image Unavailable

கடப்பா, செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் உள்பட 74 பேரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப் பகுதியில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, செம்மரம் கடத்தலைத் தடுக்க ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், செம்மரம் கடத்தியதாக 74 பேரை ஆந்திர மாநிலம் கடப்பா போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்ற 73 பேரும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. கைதான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடப்பா போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருமண விழாவிற்கு வந்ததாகக் கூறி செம்மரக் கட்டை கடத்தலில் ஈடுபட்டதாகவும் கடப்பா போலீசார் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து