முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் ஸ்மிருதி வீடு முன் மாணவர்கள் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடியை துவேஷித்து விமர்சித்ததால் சென்னை ஐஐடிமாணவர்கள் அமைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அங்கீகார ரத்து நடவடிக் கையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளார் என மாணவர்கள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் குவிந்து நேற்று போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பைச்சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியையும் குற்றம் சாட்டினர்.

சென்னை ஐஐடி மாணவர்கள் அமைப்புக்கு மீண்டும் அங்கீகாரம் அளிக்க வேண்டும். என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். போராட்டம் நடத்திய சிலர் தடுப்பை கடந்து செல்ல முயன்றபோது அவர்களை  போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் விதிகளை மீறி குறிப்பிட்ட மாணவர்கள் அமைப்பு செயல்பட்டதால் அந்த அமைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அந்த கல்வி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியை துவேஷிக்கும்வகையில் அம்பேத்கார் பெரியார் மாணவர்கள் அமைப்பு செயல்பட்டதால் அந்த மாணவர் அமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என தகவல்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து