முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனீர் விருந்தில் பங்கேற்க தேவகவுடாவிற்கு மோடி அழைப்பு

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, தான் அளிக்கும் தேனீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று ஒரு ஆண்டு பூர்த்தியாகி உள்ளது.இதனை யொட்டி முன்னாள் பிரதமர் தேச கவுடாவிற்கு தேனீர் விருந்து அளிக்க மோடி அழைப்பு விடுத்தார்.

,இது குறித்து தேவ கவுடா கூறுகையில்,பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது.இதனையொட்டி ,தான் அளிக்கும் தேனீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என எனது செயலாளரிடம் மோடி அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனது உடல் நிலை குறித்து மோடிக்கு தெரியும் என்பதால் எனக்கு சவுகரியப்படும் நேரத்தில் இந்த தேனீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என மோடி கூறியுள்ளார். வருகிற ஜூன்3 அல்லது 4ம்தேதி நான் டெல்லி செல்கிறேன். அப்போது பிரதமர் மோடியை சந்திப்பேன் .இந்த சந்திப்பு சம்பிரதாயமான சந்திப்பு ஆகும். வேறு எந்த காரணங்களுக்காகவும் நான் பிரதமரை சந்திக்கவில்லை என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து