முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை ஆதரித்து சரத்குமார் பிரசாரம்

சனிக்கிழமை, 30 மே 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்ய உள்ளார். இது பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். ஏராளமான சாதனைகளை செய்து இருக்கிறார். இவற்றை பிரசாரத்தின் போது மக்களிடம் எடுத்து சொல்வோம்.

இன்னும் ஒரு ஆண்டில் சட்டசபை பொதுத்தேர்தல் வர உள்ளது. எதிர்கட்சிகள் அனைத்தும் முதல்–அமைச்சர் பதவி ஆசையில் கூட்டணி சேர முடியாமல் தவிக்கின்றன என்றார்.

பின்னர் அவரிடம், தேர்தல் கமிஷன் அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், எனவே தான் விரைவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருப்பது பற்றி கேட்டதற்கு, அப்படி அவர் கருதினால் சட்ட ரீதியாக அணுகலாமே என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து