முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும்: எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்

திங்கட்கிழமை, 1 ஜூன் 2015      அரசியல்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்று த.மா.கா. துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இம்மாதம் 27-ந்தேதி (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்த நிலையில், அக்கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஆர்.கே.நகர் தொகுதியில் அ தி.மு.க. வேட்பாளரான முதலமைச்சர் ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக,  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-–

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இடைத்தேர்தல்களில் தமிழ்நாட்டை பொறுத்தவரை சில உயர்ந்த மரபுகளை பின்பற்றுவதே முறையாக இருக்கும். 1981-ம் ஆண்டு திருப்பத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வால்மீகி வெற்றி பெற்றிருந்த அந்த தொகுதியை இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். காங்கிரசுக்கே விட்டுக்கொடுத்தார். தனி அழைப்பு விடாத நிலையிலும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரமும் செய்தார்.

அதேபோல், ஆர்.கே.நகரில் ஒரு உயரிய மரபை ஏற்படுத்தும் வகையில் யாரும் போட்டியிடாமல் போட்டியின்றி தமிழக முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்வதே விவேகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம்முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கி நாடு போற்றும் நல்லாட்சியை புகழ்மிக்க பொற்கால ஆட்சியை வழங்கி தமிழக மக்களை பாதுகாத்திடும் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அவருக்கு முஸ்லீம் பாதுகாப்புக் கழகம் தனது ஆதரவை அளிக்கிறது.வெற்றி வேட்பாளர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காண்டு சாதனைகளை ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள இஸ்லாமிய வாக்காளர்களிடமும் மற்றும் அனைத்து சமுதாய வாக்காளர்களிடமும் வீடு வீடாக நேரில் சென்று பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்து ஜெயலலிதாவுக்கு தீவிர பிரச்சாரம் செய்வோம்.

சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் த.மா.க., தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டன. இதேபோல் மற்ற எதிர்க்கட்சிகளும் அறிவிக்க வேண்டும். இதேபோல சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடாமல் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு இடிமுரசு இஸ்மாயில் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து