முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் பிரச்சாரம்

திங்கட்கிழமை, 8 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. தேர்தல் பணிக்குழுவினர் மற்றும் கழகத் தொண்டர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் 27–ந்தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க.வின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தேர்தல் பணியாற்றிட முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்துள்ள 50 பொறுப்பாளர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

தொகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் கட்சி தொண்டர்கள் இரட்டை இலை சின்னம், ஜெயலலிதா படத்துடன் சென்று ஓட்டு கேட்டு வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் இரட்டை இலை சின்னம், ஜெயலலிதா படம் காட்சி அளிக்கிறது.
சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாகமாக வரவேற்று ‘அம்மாவுக்கு தான் எங்கள் ஓட்டு’ என்று உறுதி கூறுகிறார்கள். தொகுதி முழுவதும் ஜெயலலிதா செய்த சாதனைகளை பட்டியல் போட்டு ஓட்டு கேட்டு வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு ஓட்டுகளை அள்ளி வழங்க மக்கள் காத்தி ருக்கிறார்கள். மக்களிடம் உற்சாகம், புதிய எழுச்சி காணப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவதால் இந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து