முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனுதாக்கல் இன்று முடிவடைகிறது

செவ்வாய்க்கிழமை, 9 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் சமூக ஆர்வலர் கே.ஆர்.ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமி உள்பட 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 5-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, அவைத்தலைவர் இ.மதுசூதனன்(மாற்று வேட்பாளர்) மற்றும் 8 பேரும், 6-ந்தேதி காந்தியவாதி சசிபெருமாள், தமிழ் மாநில கட்சி ஆர்.சி.பால்கனகராஜ் உள்பட 7 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

நேற்று முன்தினம்  5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து இதுவரை மொத்தம் 27 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர்(சி.பி.ஐ.) சி.மகேந்திரன் நேற்று  தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று  மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை 11-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு 13-ந்தேதி கடைசி நாளாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து