முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - வங்கதேச டெஸ்ட் தொடர்: மழையால் 2-ம் நாள் ஆட்டம் ரத்து

வியாழக்கிழமை, 11 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

பதுல்லா: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் நேற்று ரத்து செய்யப்பட்டது.  பதுல்லாவில் இந்தியா வங்கதேச அணிகள் ஆடும் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 239 ரன்களை எடுத்திருந்தது. தவன் 150 ரன்களுடனும், முரளி விஜய் 89 ரன்களுடனும் இருந்தனர். முதல் நாள் ஆட்டத்தன் போது பெய்த மழையால் போட்டி தடைபட்டது. 3 மணி நேர இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து 90 ஓவர்களுக்கு மாறாக வெறும் 56 ஓவர்களே வீசப்பட்டன.

இந்நிலையில் 2-ம் நாள் ஆட்டமான நேற்றைய போட்டியில் காலையிலிருந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக போட்டி தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி அங்கு மழை நின்று விட்டாலும் மைதானத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியிருந்தது. தொடர்ந்து மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் இரண்டாம் நாள் ஆட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து