முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டட்கர்ட் புல்தரை டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்

வெள்ளிக்கிழமை, 12 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

 ஸ்டட்கர்ட்- கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. இதற்கு பயிற்சி அளிக்கும் வகையில் புல்தரை டென்னிஸ் போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் நடந்து வருகிறது. ஜெர்மனி நாட்டில் ஸ்டட்கர்ட் நகரில் நடந்து வரும் மெர்சிடஸ் கோப்பை புல்தரை டென்னிஸ் போட்டியில் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் 2 முறை விம்பிள்டன் சாம்பியனான ரபேல் நடால், சைப்ரஸ் வீரர் மார்கோஸ் பாக்தாதிஸை எதிர்கொண்டார். சிறப்பாக ஆடிக பாக்தாதிஸ், இந்தப்போட்டியில் நடாலுக்கு கடும் சவாலாகத் திகழ்ந்தார்.

முதல் 2 செட்களும் டை பிரேக்கருக்கு சென்றன. இதில் முதல் செட்டை நடாலும், இரண்டாவது செட்டை பாக்தாதிசும் வென்றனர். மூன்றாவது செட்டில் அதிரடி ஆட்டத்தில் இறங்கிய நடால், பாக்தாதிசின் சர்வீஸ் கேம்களை முறியடித்து செட்டை கைப்பற்றினார். நடால் 7-6, 6-7, 6-2 என்ற செட்களில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 2 மணி 40 நிமிட போராட்டத்துக்கு பின்னரே நடாலால் பாக்தாதிசை வெல்ல முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து