முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.பிரமுகர் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 12 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, ரயிலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட சென்னை அதிமுக பிரமுகர் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் மரணமடைந்த பிரமுகரின் குடும்பத்திற்கு ரூ3லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்என்று  ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
வடசென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க.நகர் பகுதி 72வது வடக்கு வட்டத்தைச்சேர்ந்த கழக உடன் பிறப்பு வி.பாலசுப்பிரமணி என் மீது கொண்ட பேரன்பு காரணமாக சில கவலைகளை மனதில் வளர்த்து அதன் தொடர்ச்சியாக ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துகொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையுற்றேன்.

என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன் பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் ஒரு போதும் ஈடுபடக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பு சகோதரர் பாலசுப்பிரமணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துகொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதி உதவியாக ரூ3லட்சம்  வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்.

இவ்வாறு  ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து