முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் அடுத்த மாதம் நவாஷ் ஷெரீப்பை மோடி சந்திக்கிறார்

வியாழக்கிழமை, 18 ஜூன் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: ரஷ்யாவில் அடுத்த மாதம் 9, 10 ம் தேதிகளில் 2 நாட்கள் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்ச மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட பல நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடியும், நவாஷ் ஷெரீப்பும் சந்தித்து பேசுவார்கள் என்று தெரியவந்துள்ளது. ரம்ஜான் மாத தொடக்கத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, இரு நாடுகளிடையே அமைதியும் நட்புறவும் நிலவ வேண்டியது அவசியம் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் மீனவர்கள் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.  இந்தியா - பாகிஸ்தான் இடையே தீவிரவாதிகள் ஊடுருவல், எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல், இருநாட்டு தலைவர்கள் விமர்சனம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்கள் ரஷ்யாவில் சந்திப்பது சுமூக உறவை ஏற்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து