முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானி கருத்து உண்மை- மோடி சர்வாதிகாரியாக செயல்படுகிறார்: இளங்கோவன்

வெள்ளிக்கிழமை, 19 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று 'கேக்' வெட்டி கொண்டாடப்பட்டது.விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

ஏழை–எளிய மக்களுக்கு இலவச வேட்டி–சேலை வழங்கப்பட்டது. இலவச மருத்துவ முகாம் நடந்தது.

பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இந்தியாவில் மீண்டும் அவசர நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். அவரது கணிப்பு உண்மையாக நடைபெற வாய்ப்பு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கட்சியிலும், ஆட்சியிலும் சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு வருகிறார்.தற்போது மத்திய அரசு ஸ்தம்பித்து விட்டது. மோடி அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம் என்ற பெயரில் வெளி நாடுகளை சுற்றிப்பார்த்து வருகிறார். இந்தியாவில் எடுக்கவேண்டிய சில அவசர முடிவுகளை வெளிநாடுகளில் இருந்து கொண்டே அறிவிக்கிறார். இதனால் நாட்டின் நிலைமை வளர்ச்சி பாதையில் இருந்து விலகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் குமரிஅனந்தன், நடிகை குஷ்பு, திருநாவுக்கரசர், யசோதா, செல்வபெருந்தகை, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம், நிர்வாகிகள் சி.டி.மெய்யப்பன், சிரஞ்சீவி, சுமதி அன்பரசு, ஜே.எம்.ஆரூண், ஹசீனா சயீத், மயிலை அசோக், டி.எல்.சலீம் அகமது, முருகானந்தம், பாபா, துறைமுகம் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று காலை 11 மணிக்கு திடீரென சத்தியமூர்த்தி பவன் வந்தார். அங்கு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous June 23, 04:12

    Let Modijiis implement the., proposed, solar,railway projects, and commonmanwelfare schemes,without doing any hindered efforts

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து