முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் அரிவராசம் விருது

சனிக்கிழமை, 20 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரபல கர்நாடக இசைப்பாடகர்களுக்கு அரிவராசனம் விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, பரிசளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா சபரிமலை அய்யப்பன் கோவில் கலையரங்கில் நேற்று காலை 8 மணிக்கு நடந்தது. விழாவுக்கு ராஜூ ஆபிரகாம் எம்எல் ஏ தலைமை தாங்கினார். எம்.பி. ஆண்டோ ஆண்டனி வாழ்த்தி பேசினார். தேவசம் போர்டு செயலாளர் ஜோதிலால் தொடக்க உரை நிகழ்த்தினார்.

கேரள அறநிலையத்துறை மந்திரி சிவகுமார் நிகழ்ச்சியில் பங்கேற்று எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு அரிவராசனம் விருதை வழங்கி வாழ்த்தி பேசினார். ரூ.1 லட்சம் பரிசு பணம் மற்றும் விருதை பெற்றுக் கொண்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஏற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணித்தின் இன்னிசை கச்சேரி நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழ்மாதப் பிறப்பையொட்டி திறக்கப்பட்டது. கோவிலில் நேற்று உதயாஸ்தமன பூஜை, படி, பூஜை, புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு அத்தாளப்பூஜையும், தொடர்ந்து அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது. இனி ஜூலை 16ம் தேதி நடைதிறக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous June 22, 12:27

    My heartiest congratulations Mr.S.P.Balasubramanian
    for receipt of ARIVARASANAM award offered Thiruvangore Devasthanam for his contribution in the karnatac music.Whatever award he received earlier,this award will certainly bring him to zenith in view of Lord ayyapa's kindness and blessings. My
    feeling is that Mr.SPB can start sing more songs in praise of Lord ayyappa than cine songs. may I request the Dinaboomi news agency management
    to communicate my wishes to Mr.SPB.

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து