முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம்: 1400 அடி உயரத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி

சனிக்கிழமை, 20 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

லண்டன்: விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்த வாலிபர் 1400 அடி உயரத்தில் இருந்து விழுந்து பலியானார். தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பார்க் நகரில் இருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் புறப்படும் முன்பே அதன் சக்கரத்துக்குள் 2 வாலிபர்கள் ஒளிந்து கொண்டனர். விமானம் சுமார் 11 மணி நேர பயணத்துக்கு பிறகு 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்த தென் மேற்கு லண்டன் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமான சக்கரத்துக்குள் ஒளிந்து பயணம் செய்த ஒரு வாலிபர் லண்டன் ரிச்மான்ட்டில் உள்ள ஒரு கடையின் கூரை மீது விழுந்தார். அவர் 1400 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

அவருடன் பயணம் செய்த மற்றொரு வாலிபர் உயிர் பிழைத்தார் அவர் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதுடன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சக்கரத்தில் பயணம் செய்து உயிருடன் இருப்பது அதிசயமாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து