முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா குறித்த கருத்து: மன்னிப்பு கோரிய இஸ்ரேல் அமைச்சரின் மனைவி

திங்கட்கிழமை, 22 ஜூன் 2015      உலகம்
Image Unavailable


ஜெருசலேம் -  ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்து இனவெறியை தூண்டும் விதத்திலான கருத்தை பகிர்ந்ததற்கு இஸ்ரேல் உள்துறை அமைச்சர் சில்வன் ஷலோமின் மனைவி மன்னிப்பு கோரியுள்ளார்.  இஸ்ரேல் நாட்டு வானொலி வர்ணனையாளரும் அந்நாட்டு உள்துறை அமைச்சரின் மனைவியுமான ஜூடி ஷலோம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒபாமா அருந்தும் காபி, கருப்பாக இருக்குமா அல்லது பலவீணமாக இருக்குமா?" என்று ட்வீட் செய்திருந்தார்.

அவர் இந்த கருத்தை ட்வீட் செய்த நிலையில், சமூக வலைதளங்களில் இதற்ககு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. நூற்றுக்கணக்கானோர் ஜூடியை பகிரங்கமாக திட்டத் தொடர்ங்கினர்.  அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஒபாமாவை இனரீதியாக காயப்படுத்தும் முட்டாள்த்தனமான கருத்தை மரியாதைக்குரிய பொறுப்பில் இருக்கும் ஜூடி ஷலோம் பகிரலாமா? என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது.

தொடர் விமர்சனங்களை அடுத்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கிய ஷலோம், தான் தவறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளார்.  "யாரோ எனக்கு அந்த ஜோக்கை கூறினர். அதனை நான் பொறுப்பற்ற முறையில் பகிர்ந்திருக்கக் கூடாது. இனம், மதம், நிறத்தைத் தாண்டி மக்களை நேசிப்பவள் நான். இதில் எனக்கு உள்நோக்கம் இல்லை. செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன்" என்று ஜூடி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து