எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மகேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 26 சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.
கடந்த 22–ந்தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். மே மாதம் 31–ந்தேதி முதலே அ.தி.மு.க.வினர் தீவிர பிரசாரம் செய்து வந்தனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முகாமிட்டு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து இரண்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடந்த 10–ந்தேதி முதலே தீவிர பிரசாரம் செய்து வந்தனர். இதுதவிர சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சுயேச்சைகளும் ஓட்டு சேகரித்தனர். நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஓட்டுப் பதிவுக்கான எந்திரங்கள் அமைத்தல் மற்றும் ஏற்பாடுகள் இன்று தீவிரமாக நடக்கிறது.மொத்தம் 530 மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 1,205 தேர்தல் பணியாளர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் பணிபுரியும் வாக்குப் பதிவு மையம் இன்று ஒதுக்கப்படுகிறது. தேவைப்படும் வாக்குச் சாவடிகளில் ரகசிய கேமிராக்கள் அமைக்கப்படுகிறது. வீடியோ எடுக்கவும் ஏற்பாடு நடந்துள்ளது. வெப் கேமராக்கள் மூலமும் வாக்குப்பதிவை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்புகள் தேர்தல் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் 5 மணியுடன் ஓய்ந்ததையடுத்து இந்த தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்த வெளியூர் தொண்டர்கள், கட்சி பிரதிநிதிகள் வெளியேறினார்கள். தங்கி இருந்தவர்கள் வெளியேறிவிட்டார்களா என்பதை அறிய போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.லாட்ஜ்களிலும் சோதனை நடந்தது. வாகன சோதனையும் தீவிரமாக்கப்பட்டது. தேர்தல் பணிமனைகளில் இருந்த படங்கள், கொடிகளும் அகற்றப்பட்டன.இடைத்தேர்தலை யொட்டி ஆர்.கே.நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதட்டமாக கருதப்படும் 22 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புக்காக 10 கம்பெனி துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 4 துணை ராணுவ படை வீரர்களை பணி அமர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. துணை ஆய்வாளர் அந்தஸ்தில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரி இதற்கு தலைமை ஏற்பார்.
அதே நேரத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் 16 துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் வெளி ஆட்கள் யாரேனும் தொகுதியில் தங்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 28 பறக்கும் படையினர், 6 கண்காணிப்பு குழுவினர், ஆகியோர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஓட்டுப்பதிவின் போது தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும் தனியாக பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக தனி குழுவும் ஏற்பட்டுள்ளது. இதில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இடம் பெற்றுள்ளனர். அதி விரைவு குழு என்று பெயரிடப்பட்டுள்ள இக்குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் விதிமீறல் பற்றிய புகார்கள் கிடைத்தவுடன் உடனடியாக அங்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.
சென்னை மாநகர போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோரது மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் துணை ராணுவ படையினர் பங்கேற்ற கொடி அணி வகுப்பும் ஆர்.கே. நகர் தொகுதியில் நடத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.