முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திகார் சிறையிலிருந்து 2 கைதிகள் தப்பியோட்டம்: ஒருவர் சிக்கினார்

திங்கட்கிழமை, 29 ஜூன் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: டெல்லியில் உள்ள திகார் சிறையில் இருந்து சுரங்கம் தொண்டி தப்பிய இரண்டு கைதிகள் தப்பி ஓடினர் அதில் ஒருவர் சிக்கினார். டெல்லி அருகே உள்ள மிகவும் பிரபலமான திகார் சிறையில் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 12 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை ஏற்பாடுகளையும் தாண்டி இரண்டு கைதிகள் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஜாவேத் மற்றும் பைசான் ஆகிய இருவரும் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் காலை வழக்கமான பரேடு நிகழ்ச்சியின்போது இந்த இருவரும் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து சிறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சனிக்கிழமை இரவு இருவரும் 7ம் எண் சிறையில் உள்ள சுவரில் ஏறி குதித்தனர். பின்னர் அங்கிருந்து சிறையின் வெளிப்புற காம்பவுண்ட் சுவருக்கு அடியில் ஒரு சுரங்க பாதையை தோண்டி சிறையில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பைசான் சிக்கினார். மற்றொரு வரை தேடி வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கம் தோண்ட கைதிகளுக்கு ஆயுதம் கிடைத்தது தொடர்பாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து