முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, 29 ஜூன் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, அதிமுக செயலாளரும் ,முதல்வருமான ஜெயலலிதா ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பண்ருட்டி ஒன்றியம், விசூர் ஊராட்சி, நன்னிகுப்பம் கிளையைச் சேர்ந்த கழக தொண்டர் ஏ.காந்தசீலன் கழக தலைமையின் மீது கொண்ட பேரன்பு காரணமாக சில கவலைகளை வளர்த்து அதன் காரணமாக விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.என் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் ஒருபோதும் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

காந்தசீலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பாக குடும்பநல நிதி உதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து