முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க கப்பலில் பிடிபட்ட 35 பேரையும் விடுதலை செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 1 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி - கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்க கப்பல் ஒன்று தூத்துக்குடி கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்தது. கியூ பிரிவு போலீசார் கப்பலை மடக்கி பிடித்தனர். அதில் சோதனை செய்தபோது 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்க கப்பலின் கேப்டன் உள்பட 35 மாலுமிகளை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கப்பலில் இருந்த ஆயுதங்கள் மற்றும் மாலுமிகளின் பாஸ்போர்ட்டு உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அமெரிக்க கப்பலின் மாலுமிகள் ஆயுதப்பிரிவு சட்டத்தின் கீழ் தங்களை கைது செய்ததை ரத்து செயய்து விடுதலை செய்ய வேண்டும். உடைமைகளை விடுவிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை 35 மாலுமிகளையும் விடுவித்து உத்தரவிட்டது. மேலும் அவர்களின் பாஸ்போர்ட், துப்பாக்கி, ஆயுதங்களை தவிர மற்றவைகளை ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 35 பேரை விடுதலை செய்தது செல்லாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கீழ் கோர்ட்டு மீண்டும் விசாரித்து 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து