முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தரிசனம்

புதன்கிழமை, 1 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதபதி பிரணாப் முகர்ஜி சுவாமி தரிசனம் செய்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விமானம் மூலம் ஐதராபாத் வந்தார். அவரை விமான நிலையத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் காலில் விழுந்து வரவேற்றார். பின்னர் ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் நரசிம்மன் ஜனாதிபதிக்கு விருந்து அளிக்க ஏர்பாடு செய்தார். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். விருந்து நிகழ்ச்சிக்கு வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விருந்து நிகழ்ச்சியில் சந்திரசேகரராவ் பங்கேற்கவில்லை. 

நேற்று திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புறப்பட்டு சென்றார். அவருடன் ஆந்திரா முதல் வர் சந்திரபாபு நாயுடுவும் சென்றார். நேற்று பிற்பகல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தரிசனம் செய்தார். பின்னர் அவர் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், மலை அடிவாரத்தில் அலி பிரியில் உள்ள கபில் தீர்த்தம் சிவன் கோவிலிலும் திரசனம் செய்தார். ஜனாதிபதி திருப்பதி வருகையையொட்டி நேற்று பகல் மற்றும் பிற்பகலில் மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதே போல் சென்னையில் இருந்து புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் வாகனங்களும் பழைய செக்போஸ்ட் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து