முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திராவில் 40 அரசு பேருந்து ஓட்டுநர்கள் நீக்கம்

புதன்கிழமை, 1 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் - கடந்த மே 7-ம் தேதி சேஷாசலம் வனப்பகு தியில் செம்மரம் வெட்டி கடத்திய தாக 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச் சம்பவத்தை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத் தலுக்கு உடந்தையாக இருந்த 40 அரசு பேருந்து ஓட்டுநர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து அம்மாநில அரசு உத்தர விட்டுள்ளது. 

திருப்பதி சேஷாசலம் வனப்பகு தியில் இருந்து விலை உயர்ந்த செம்மரங்கள் வெளிநாடுகளுக்கு வெட்டிக் கடத்தப்படுகிறது.  இது தொடர்பான விசாரணையில், சீன வியாபாரிகள் உட்பட செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்த முக்கிய நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி பல கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கடத்தல் சம்பவங்களில் ஆந்திர வனத்துறை, போலீஸ் அதிகாரி களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந் துள்ளது. எனவே கடத்தலில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.  இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 40 அரசு பேருந்து ஓட்டுநர்கள் நேற்று பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் செம்மர கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் உறுதியானதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து