முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை: சுரேஷ் ரெய்னா

வியாழக்கிழமை, 2 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை: தொழிலதிபர் ஒருவரிடமிருந்து சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, டிவைன் பிராவோ ஆகியோர் லஞ்சம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டை லலித் மோடி வைக்க, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியிருப்பதாவது: எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. கிரிக்கெட் ஆட்டத்தை நான் மிகவும் நேசிப்பவன், பற்றுதலுடன் அந்த ஆட்டத்தை ஆடி வருகிறேன். எனவே எனக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தற்போது பரிசீலித்து வருகிறேன்.

சமீபத்தில் ஊடகங்களில் என்னைப்பற்றி வந்த செய்திகளை முன்வைத்து உலகம் முழுதும் உள்ள எனது ரசிகர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால் கிரிக்கெட் ஆட்டத்தில் நான் சரியான உணர்வுடன், உயர்ந்தபட்ச நேர்மையுடன் செயல்பட்டு வருகிறேன். நான் எந்த வித தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை, என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

லலித் மோடியின் கடிதம் கிடைத்ததை ஒப்புக் கொண்ட ஐசிசி, அவர் குறிப்பிட்ட 3 வீரர்களுக்கு எதிராக எந்த வித ஆதாரங்களும் இல்லை என்று நற்சான்றிதழ் வழங்கியது. பிசிசிஐ-யும் வீரர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து