எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மெட்ரோ ரெயில் திட்டம் எப்போது நிறைவேறும் என்பது குறித்து தவறான தகவலை அளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருப்பதை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டி உள்ளார்.
அதன் பிறகு ஸ்டாலின் மவுனமாகிவிட்டார் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரு திட்டம் எனது ஆட்சியில் நிறைவேறப் போகிறது என்றால், அந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு, தான் தான் காரணம் என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில், உடனே அந்தப் பகுதிக்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவதையும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நான் திறந்து வைக்க இருக்கிறேன் என்பதை அறிந்த ஸ்டாலின், அந்தத் திட்டத்தை எனது தலைமையிலான அரசு கிடப்பில் போட்டுவிட்டது என்று கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால், ஸ்டாலின் பேட்டி அளித்த இரண்டு மாதங்களில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்னால் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதே போன்று, தற்போது வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது.
இதற்கான சோதனை ஒட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சோதனை ஒட்டம் நடக்க உள்ளதை தெரிந்து கொண்ட ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. சார்பில் வேலூரில் ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி, அந்த ஆர்ப்பாட்டத்திலே கலந்து கொண்டு, 25 விழுக்காடு பணிகள் தான் முடிவுற்றுள்ளன என்று ஒரு கட்டுக்கதையை கட்டவிழ்த்து விட்டார். அதே அடிப்படையில் தான், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது என்பதையும், மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கு தேவையான சட்டப்பூர்வ பாதுகாப்பு அனுமதி வழங்குவது தொடர்பான பாதுகாப்புச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்பதையும் தெரிந்து கொண்ட ஸ்டாலின், கடந்த மார்ச் 10-ந் தேதி திமுக சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில், மெட்ரோ இரயிலை உடனே இந்த அரசு தொடங்கி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், சென்னையில் உள்ள நான்கு மாவட்ட திமுக சார்பில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். எங்கள் போராட்டத்திற்கு அனுமதி தராவிட்டால், சிறையும் நிரப்பத் தயாராக இருக்கிறோம் என்று வாய் சவடால் விட்டார். இந்த வாய் சவடாலோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று 19.3.2015 அன்று, தலைமைச் செயலாளருக்கும்; திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளருக்கும் ஒரு கடிதத்தை எழுதினார்
ஸ்டாலின். அதில் இந்த திட்டம் 2012 ஆம் ஆண்டே முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்; ஆனால், தற்போதைய அதிமுக அரசு அதனை நிறுத்தி விட்டது என்றும் தெரிவித்ததோடு; கோயம்பேடு ஆலந்தூர் இடையில் வணிக ரீதியான மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கு உடன் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும்; அவ்வாறு வழங்கப்படவில்லையெனில், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மிரட்டும் தொனியில் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.
பிறர் சொல்வது சரிதானா என்பதை தெரிந்து கொள்ளாமலேயே கருத்துகள் தெரிவிப்பதும், அறிக்கைகள் வெளியிடுவதும், திரு கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் கை வந்த கலை தான். அதனால் தான் மெட்ரோ ரெயில் திட்டம், 2014ல் முடித்திருக்க வேண்டும் என்று, 10.3.2015 அன்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியவர், இந்தக் கடிதத்தில் 2012-ஆம் ஆண்டே முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் கடிதத்திற்கு திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு செயலாளர், 15.4.2015 அன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், சென்னை மெட்ரோ இரயில் திட்டங்களின் விவரத்தை தெரியப்படுத்தி, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தப் படியே 31.12.2015 அன்று தான் இந்த திட்டம் முடிப்பதற்கான வரையறை என்றும், 2012 ஆம் ஆண்டே முடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியது தவறு என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், ஆண்டு வாரியாக இத்திட்டத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகையும், பணிகளின் முன்னேற்றம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதில், 2007-08 முதல் 2010-11 வரையிலான காலத்தில், 1,143 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்பதையும்; 2011-12 முதல் 2014-2015 வரை 9,229 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்பதையும்; மே 2011 வரை 3 சதவீதமாக இருந்த பணி முன்னேற்றம், தற்போது 76 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், சென்னை மெட்ரோ ரெயில் இயக்கப்படுவதற்கான மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் இன்னமும் பெறப்படவில்லை என்றும், அது கிடைக்கப்பெற்ற பின்னரே மெட்ரோ இரயில் இயக்குவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற இயலும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும் எனவும்; உண்மை நிலையை தனது கடிதத்தில் தெரிவித்ததற்கு பின்னரும், வழக்கு தொடரும் நடவடிக்கையை மேற்கொண்டால், அதனால் ஸ்டாலினுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு அவரே பொறுப்பு எனவும் அந்தக் கடிதத்தில் அரசு செயலாளர் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரெயில் திட்டம் பற்றி முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் பணிகள் எவ்வாறு செயல்படுத்தப்படவில்லை என்பதையும்,
எனது தலைமையிலான அஇஅதிமுக அரசு தான் முழுவீச்சுடன் இந்த திட்டத்தினை செயல்படுத்தியது என்பதையும், மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்படாமல் மெட்ரோ இரயிலை வணிக ரீதியாக இயக்க இயலாது என்பதையும், அதன் பின்னர் தெரிந்து கொண்ட ஸ்டாலின், மெட்ரோ இரயில் திட்டம் பற்றி பேசுவதையே நிறுத்திக் கொண்டதோடு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாய் சவடாலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
ஆனால், 30.6.2015 அன்று வெளியிட்ட அறிக்கையில் மு.கருணாநிதி, மெட்ரோ ரெயில் தொடங்குவதை தள்ளிக் கொண்டே போனால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவிப்பு செய்ததற்குப் பிறகு, வேறு வழியில்லாமல் இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்டாலினுக்கு அரசு செயலாளர் அனுப்பிய கடிதத்தை ஸ்டாலினிடம் இருந்து வாங்கிப் படித்து, உண்மை நிலையை கருணாநிதி தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.