முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ரோசய்யாவின் 82வது பிறந்தநாள் முதல்வர் ஜெயலலிதா மலர்க்கொத்துடன் வாழ்த்து

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: கவர்னர் ரோசய்யாவின் 42 வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா மலர்க்கொத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாடு கவர்னர் ரோசையாவின் 82–வது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா மலர் கொத்துடன் வாழ்த்துக் கடிதத்தை நேற்று அனுப்பினார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:–

82–வது பிறந்த நாளை கொண்டாடும் உங்களுக்கு எனது மகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடனும், மன அமைதியுடனும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். என்று அவர் கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா நேற்று கவர்னரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து, தனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார். அப்போது, தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்வருக்கு தனது நன்றியினை கவர்னர் ரோசையா தெரிவித்து கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து