முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைப்பேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு: தயாநிதி மாறனுக்கு சிபிஐ உத்தரவு

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் தயாநிதி மாறன் புதிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் சிபிஐ உத்தரவிட்டுள்ளது. பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் மத்திய அரசுக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தது.  இந்த குற்றச்சாட்டு குறித்து, தயாநிதி மாறனிடம் ஜூலை 1 ஆம் தேதி, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அவரிடம் 2 வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்றது. மொத்தம் 3 நாள் விசாரணை நடந்தது. இந்த மூன்று நாள் விசாரணையில் பல கேள்விளுக்கு சிபிஐ அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பதில் அளித்தார்.  இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறனிடம் விசாரணை முடிந்த நிலையில், அவர் இந்த வழக்கு சம்பந்தமான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று சிபிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்தே, சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து