முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.  இதில் நடால் 2-வது சுற்றில் 5-7, 6-3, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 102-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரரான டஸ்டின் பிரவுனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், தொடர்ந்து 4-வது ஆண்டாக ஆரம்ப சுற்றுகளிலேயே வெளியேறியிருக்கிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தகுதி நிலை வீரரிடம் நடால் தோற்பது இதுவே முதல்முறையாகும்.  பிரெஞ்சு ஓபனில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால், இந்த ஆண்டு காலிறுதியோடு வெளியேறியதால், தரவரிசையில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் இப்போது விம்பிள்டனில் அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளது டென்னிஸ் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து