எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகி வருகிறது. மக்கள் மன்றத்தின் மகாராணியாக ஜெயலலிதா இருக்கிறார் என்று சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி கூறினார். ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி 2016 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று அவர் கூறினார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–
நீதிமனறத்தில் சூதுமதியாளர் பின்னிய சூழ்ச்சி வலையை அறுத்தெறிந்து, நேர்மையை நிலை நிறுத்தி, நியாயத்தை வென்றெடுத்து நீதி என்னும் வேள்வியில் புடம் போட்ட தங்கமாய் மிளிரும் நமது முதலமைச்சர், எனது கடவுள் புரட்சித்தலைவி அம்மா, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்துத்தந்துள்ள விதிமுறைகளின்படியும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படியும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, மக்களை சந்தித்தார்.
மக்கள் மன்றத்தில், மக்கள் அன்பிலே நீந்தி மக்களின் பாசத்தை ஏந்தி மக்கள் ஆதரவை முழுமையாகப் பெற்று மக்கள் நம்பிக்கையை வென்றெடுத்திருக்கிறார். இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எந்த அரசியல் வரலாறும் இதுவரை கண்டிராத வகையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை பேரையும் டெபாசிட் இழக்கச் செய்து இதுவரை இந்தியா கண்டிராத இமாலய சாதனை வெற்றியைப் பெற்று ஒரு புதிய சரித்திரத்தை முதலமைச்சர் அம்மா படைத்திருக்கிறார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மாவை எதிர்த்துப் போட்டியிட்டால் நிச்சயத் தோல்வி என்பது மட்டுமல்ல; டெபாசிட்டே காலி என்பதை உணர்ந்துகொண்ட கருணாநிதி, நீதித்துறையையும் தேர்தல் ஆணையத்தையும் கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட்டு, தேர்தல் புறக்கணிப்பு நாடகத்தை அரங்கேற்றினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஒப்பில்லாத தலைவர் எங்கள் அம்மாதான்.- தமிழ்நாட்டில் என்றென்றும் அம்மாவின் ஆட்சிதான் என்று, சரித்திரம் காணாத வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெறச் செய்து 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு கட்டியம் சொல்லி இருக்கிறார்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வாக்காளப் பெருமக்கள்!
அம்மா பெற்ற இந்த மகத்தான வெற்றியை தமிழகமே கொண்டாடுகிறது. அம்மாவின் மக்கள் செல்வாக்கைக் கண்டு உலகமே வியந்து பாராட்டுகிறது. ஆனால் இங்குள்ள சில எதிர்க்கட்சிகள் மட்டும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து வித விதமான பொய்களை விற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் மக்கள் செல்வாக்கை மாற்ற வழியில்லையே என்று தங்களுக்குள்ளேயே அழுது புலம்பி மருண்டு மயங்கி நீதிமன்ற தீர்ப்பையும் விமர்சிக்கின்றார்கள்; மக்கள் மன்றத் தீர்ப்பையும் விமர்சிக்கிறார்கள்; மக்களை மக்களே ஆளும் ஜனநாயகத்தில், மக்கள் மன்றமும் நீதிமன்றமும்தான் தலையாய மாமன்றங்கள் ஆகும்.
அதனால் தான் நீதிமன்றங்களின் தீர்ப்பை நீதி தேவதையின் தீர்ப்பு என்றும், மக்கள் மன்றத்தின் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்றும் போற்றுகிறார்கள். இப்படி மக்கள் மதிக்கின்ற, மக்களின் மரியாதையைப் பெற்றுள்ள நீதிமன்றமானாலும் சரி, மக்கள் மன்றமானாலும் சரி, வழங்குகின்ற எந்த தீர்ப்பானாலும் தங்களுக்கு ஆதரவான தீர்ப்பு என்றால் சரி என்கிறார்கள், பாராட்டுகிறார்கள்! தங்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக வழங்கப்படுகின்ற நியாயமான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மனமின்றி உண்மை நிலையை திரித்து மனம் போன போக்கில் விமர்சிக்கிறார்கள்.
தன்மீது கருணாநிதி போட்ட 11 பொய் வழக்குகளையும் நீதிமன்றங்களில் நேருக்கு நேர் சந்தித்து பொய் வழக்குகளை பொடிப்பொடியாக்கி நீதியை நிலைநாட்டிய புனித தலைவி எங்கள் அம்மா. அதைப் போலவே மக்கள் மன்றமும் கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அம்மாவை முதலமைச்சராக்கி, அண்ணா தி.மு.க.விற்கு அறுதிப் பெரும்பான்மையுடனான வெற்றியை அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும்,நடைபெற்ற திருச்சி (கிழக்கு), சங்கரன்கோயில், புதுக்கோட்டை, ஏற்காடு, ஸ்ரீரங்கம், ஆலந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும், தொடர்ந்து நடைபெற்ற தூத்துக்குடி, திருநெல்வேலி, கோயம்பத்தூர் மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி இடைத் தேர்தல்களிலும், அம்மாவுக்கே மக்கள் வெற்றிக் கனிகளை பரிசாகத் தந்தார்கள்.
அதன்பின் 2014ம் ஆண்டு, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாது தனித்துப் போட்டியிட்டு, 39ல் 37 இடங்களில் வெற்றி பெற்று தமிழகம் இதுவரை காணாத மகத்தான வெற்றியை அம்மாவுக்கு மக்கள் அளித்தார்கள். இப்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடும் துணிவில்லாத திமுகவையும் மற்ற கட்சிகளையும் நிராகரித்தும், போட்டியிட்ட கம்யூனிஸ்ட்டுக்கு படுதோல்வியைத் தந்தும், மக்கள் மன்றம் மகத்தான வெற்றியை அம்மாவுக்கு வழங்கியுள்ளது.
அம்மாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வாக்குப்பதிவு அன்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் காலை முதல் மாலை வரை வரிசையாக நின்று வாக்களித்ததை படம்பிடித்து அனைத்து செய்தி ஊடகங்களும் மக்களின் எழுச்சியை செய்தியாக வெளியிட்டன. அதற்குப் பிறகும் மக்கள் தந்த அந்த தீர்ப்பினை கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கு மீண்டும் மக்கள் 2016ல் தக்க பாடம் புகட்டுவார்கள். இது சத்தியம்.
அம்மாவின் அருமை பெருமைகளை, ஆற்றல் சிறப்புகளை, அறிவுத் திறமைகளை மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் புரிதலின் நிரூபணம்தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அம்மாவுக்கு மக்கள் அளித்த மகத்தான வெற்றி! வீழ்ந்து விட்டார் அம்மா, இனி நாம் வாழ்ந்துவிடலாம் என்று எண்ணி இறுமாந்திருந்த திமுகவின் உச்சந்தலையில் ஆணி அடித்து, மக்கள் ஏமாந்து நிற்கும் வேளையில் ஏற்றம் பெற்றுவிடலாம் என்று பூரித்துக் கிடந்த பிற அரசியல் கட்சிகளையும் கை கட்டி வாய்ப்புதைத்து மக்கள் மன்றத்திலே நிற்க வைத்த மக்கள் மன்றத்தின் மகாராணி, 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமே இந்த மாபெரும் வெற்றி என்று தமிழகமே கொண்டாடும் மகத்தான வெற்றியை ஈட்டித்தந்த மக்கள் இதயங்களை ஆளுகின்ற பேரரசி தமிழ்த்தாயின் தவப்புதல்வி தமிழகத்தின் விடிவெள்ளி முதலமைச்சர் அம்மாவுக்கு சென்னை மாநகராட்சி தனது இதயமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு மேயர் சைதை துரைசாமி கூறினார். அப்போது மாமன்ற உறுப்பினர்கள் மேஜையில் தட்டி பலத்த ஆரவாரம் செய்தார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.