முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியாபம் ஊழல் தொடர்பான நிருபரின் மரணம் குறித்த விசாரணை: ஜேட்லி வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: வியாபம் ஊழல் குறித்த பல சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் தொழில்முறை தேர்வுகளில் நடந்த ஊழல் குறித்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், வியாபம் ஊழல் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நிருபர் அக் ஷய் சிங்கின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. நேர்மையான விசாரணை நடத்துவதுதான் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதாக இருக்கும்.

38 வயதில் நிருபர் அக் ஷய் சிங் அகால மரணம் அடைந்தது சோகமானது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து