எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இந்திய ரெயில்வேக்கு 50 ஆயிரமாவது ரெயில் பெட்டியைத் தயாரித்து சென்னை ஐ.சி.எப். (இணைப்புப் பெட்டி தொழிற்சாலை) சாதனை படைத்துள்ளது.
மின்சார பயன்பாட்டை குறைக்க சூரிய ஒளி தகடுகளுடன் ரெயில் பெட்டி தயாரிக்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். கடந்த 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்தொழிற்சாலையில் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மண்டல ரெயில்வேக்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. ஐ.சி.எப். தற்போது 50 ஆயிரமாவது ரெயில் பெட்டியை (3–ம் வகுப்பு ஏ.சி.) தயாரித்துள்ளது.
இந்த ரெயில் பெட்டி தொடக்க விழா மற்றும் துருப்பிடிக்காத இரும்பு மூலம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் புதிய பிரிவு அர்ப்பணிக்கும் விழா ஆகியவற்றை மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு புதுடெல்லியில் உள்ள ரெயில்வே வாரிய அலுவலகத்தில் இருந்தப்படியே வீடியோ கான்பரன்சிங் (காணொலி காட்சி) மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதே சமயத்தில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். பணிமனையில் நடைபெற்ற விழாவில் ரெயில்வே வாரிய உறுப்பினர் (மெக்கானிக்கல்) ஹேமந்த் குமார், நிதி ஆயோக் (திட்ட கமிஷன்) உறுப்பினர் வி.கே.சரஸ்வத், ஐ.சி.எப். பொதுமேலாளர் அசோக் அகர்வால், ரெயில் பெட்டி தொழிற்சாலையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு கொடி அசைத்து இதன் ஓட்டத்தை துவக்கினர்.
50 ஆயிரமாவது ரெயில் பெட்டியில் பயணிகள் உள்ளே நுழையும் இரண்டு வாசல்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் ரெயில் பெட்டியின் உள்ளே நுழையும் நபர்களை படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிடும். இதனால் குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாது.விழாவில் மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது:–-
ரெயில்வே வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஐ.சி.எப். தயாரித்த முதல் பெட்டிக்கும், தற்போது தயாரிக்கப்பட்ட 50 ஆயிரமாவது ரெயில் பெட்டிக்கும் தரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் உள்ளன. மாற்றங்களை கொண்டுவரும் ஐ.சி.எப். ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.சி.எப்.பிற்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
50 ஆயிரமாவது பெட்டி தயாரித்த இந்த வேளையில் ஒரு லட்சமாவது பெட்டி எப்படி இருக்கும் என்ற கற்பனை செய்துபார்க்கிறோம். அந்த பெட்டி தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்பத்தை பெறுவதற்கு இப்போதில் இருந்தே திட்டமிட்டு வருகிறோம். ரெயில் பெட்டிகளை தயாரிப்பதற்கு மூலப்பொருள் மேலாண்மை அவசியம்.மூலப்பொருள்களின் தன்மைகளை ஆராய்வதற்காக பனாரசஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று உற்பத்தி பிரிவினை மேம்படுத்துவதற்கு திட்டக் கமிஷன் உறுப்பினர், ரெயில்வே வாரிய உறுப்பினர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மேல்புறமாக இருக்கைகளுக்கு ஏறி செல்லும் படிகள், குப்பை தொட்டிகள், கழிவறைகள் உள்பட ரெயில் பெட்டியின் உள்புற கட்டமைப்புகள் பயணிகளுக்கு சுமுகமானதாக அமையும் வகையில் மாற்றம் செய்யப்படும். இதற்காக தேசிய வடிவமைப்பு நிறுவனத்துடன் ரெயில்வே அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.மின்சார தேவைப்பாட்டை கணிசமாக குறைக்கும் வகையில் ரெயிலுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் கொடுக்கப்பட உள்ளது. இதற்காக இந்திய அறிவியல் கழகத்தோடு (ஐ.ஐ.எஸ்.) இணைந்து ரெயில் பெட்டியில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.
ரெயில்வே நிதி நெருக்கடியில் உள்ளது. இருந்தபோதிலும் மக்கள் கட்டணம் செலுத்த தயாராக இருந்தால் உலக தரம் வாய்ந்த சேவைகளை கொடுப்பதற்கு ரெயில்வே தயாராக இருக்கிறது. துருப்பிடிக்காத இரும்புகள் மூலம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பிரிவு இந்த ஆண்டு ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இதில் 100 ரெயில் பெட்டிகள் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐ.சி.எப். வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கடந்த நிதியாண்டில் மட்டும் ஐ.சி.எப். 1,704 ரெயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த இலக்கை ஐ.சி.எப். தனது வரலாற்றில் முதல் முறையாக எட்டியது.
ரெயில்வே வாரியத்தின் வழிக்காட்டுதலின்படி துருப்பிடிக்காத ரெயில் பெட்டிகளைத் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகள்
தொடங்கப்பட்டுவிட்டன. மேலும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய, எடைக் குறைவான- நீளமான பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை பெட்டிகள் தயாரிப்பதன் மூலம் ஒரு பெட்டியில் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்ய முடியும். இந்தப் பெட்டிகள் எடைக் குறைவாக இருப்பதால் மணிக்கு 160 கி.மீ. முதல் 200 கி.மீ. வேகம் வரை ரெயில்களை இயக்க முடியும். கடந்த நிதியாண்டின் முடிவில் 65 எடை குறைந்த பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 300 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துருப் பிடிக்காத பெட்டி தயாரிக்க ரெயில்வே வாரியம் ரூ. 327 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மின்மயமாக்கப்படாத வழித்தடங்களில் இயங்கும் டீசல் – எலக்ட்ரிக் ரெயில்களைத் அதிக அளவில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட தேவை அதிகம் இருப்பதால், 360 டீசல் – எலக்ட்ரிக் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: