எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தேர்தல் களத்தில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்க துணிச்சல் இல்லாமல் வெளியில் இருந்து கொண்டு அறிக்கை விட்டு வீராப்பு பேசுவதா என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை அமைச்சர் பா.வளர்மதி காட்டமாக தாக்கினார்.
அம்மாவின் சாதனைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்; அவரது வெற்றியும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்றும் அவர் கூறினார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பெற்ற இமாலய வெற்றியை கொண்டாடும் வகையிலும், அண்ணா தி.மு.க. ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கியும் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.
விருகை பகுதி அ தி.மு.க. சார்பில் கே.கே.நகர் எம்.ஜி.ஆர். மார்க்கெட் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு விருகை பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கே.மலைராஜன் தலைமை வகித்தார். தென் சென்னை தென் மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:–
ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மா பெற்ற வெற்றி சரித்திரத்தில் எழுதப்பட்ட வெற்றி. இதுவரை இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் அம்மா இமாலய வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றி அம்மாவின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி. தமிழக மக்களின் ஒட்டுமொத்த தீர்ப்பு இது. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு இந்த வெற்றி ஒரு அச்சாரம். ஜெயலலிதா பக்கம் என்றென்றும் மக்கள் சக்தி உள்ளது என்பதற்கு இந்த வெற்றி ஒரு எடுத்துக்காட்டு; எந்த காலத்திலும் அம்மாவை இனி யாராலும் வீழ்த்த முடியாது. அம்மா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் அந்த தொகுதி மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். நாங்கள் ஓட்டு கேட்க சென்றபோது இது அம்மா தொகுதி. முதலமைச்சர் அம்மா இந்த தொகுதியில் நிற்பது பெருமையாக இருக்கிறது. அம்மாவுக்கு ஓட்டு போடும் வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்று தெரிவித்தார்கள். அந்த அளவுக்கு அம்மா மீது மிகுந்த பாசமும் பற்றும் கொண்டிருந்தனர். இந்த தேர்தல் அறிவித்த உடனேயே தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று கருணாநிதி கூறினார். அவரைத் தொடர்ந்து மற்ற கட்சிகளும் போட்டியிட போவதில்லை என்று அறிவித்தார்கள்.
தேர்தல் என்றால் வெற்றி–தோல்வி வரும். ஆனால் தேர்தல் களத்துக்கே வரவில்லை. வெளியில் இருந்து கொண்டு பணநாயகம் ஜெயிக்கும். ஜனநாயகம் ஜெயிக்காது என்றார். களத்துக்கு வந்து போட்டியிடாமல் வெளியில் இருந்து கொண்டு இப்படி பேச கருணாநிதிக்கு தகுதி இல்லை. தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்று தெரிந்து கருணாநிதி ஓடிவிட்டார். கருணாநிதி இன்று அல்ல; என்றுமே அவர் எழுந்திருக்க முடியாது. மக்கள் அவரை ஓரம்கட்டிவிட்டனர்.
தேர்தலில் ஒருவர் (டிராபிக் ராமசாமி) நின்றார். ஒவ்வொரு கட்சி தலைவரையும் போய் சந்தித்து ஆதரவு கேட்டார். வெற்றி வீரர் என்று நினைத்து ஆதரவு கேட்டார். ஸ்டாலினிடம் போய் கேட்டார். அவர் தலைவரிடம் கேட்டு சொல்கிறேன். செயற்குழுவை கூட்டி சொல்கிறோம் என்றார். ஒவ்வொருவர் வீட்டு கதவையும் தட்டினார். ஒரே ஆளாக வந்தார். அப்படியே போனார். அம்மா இமாலய வெற்றி பெற்று சாதனை படைத்தார்.முதலமைச்சர் அம்மாவை அமெரிக்காவில் இருந்து வரும் பிரபல பத்திரிகை ‘நியூயார்க் டைம்ஸ்’ வெகுவாக பாராட்டி இருக்கிறது.ஜெயலலிதாவுக்காக தமிழகம் முழுவதும் கோவில்களில் அவரது தொண்டர்களும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தொண்டர்களை ஜெயலலிதா வைத்திருக்கிறார். அவர் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை முன்னேற்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். தமிழகத்தின் அழிக்க முடியாத சக்தி அவர். சிறந்த நிர்வாக திறமை உள்ளவர் என அம்மாவை வெகுவாக அந்த பிரபல பத்திரிகை புகழ்ந்து எழுதியிருக்கிறது.
இதுபோன்று அம்மாவுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகி வருவதை கண்டு கருணாநிதியால் பொறுத்து கொள்ள முடியவில்லை. எனவே தான் அம்மா ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இப்படிச் சொல்ல அவருக்கு எந்த தகுதியும் இல்லை. கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் புழல், திகார் சிறைக்கு அனுப்பாமல் அம்மா ஓய மாட்டார். கருணாநிதி தான் ஓய்வெடுக்க வேண்டும். அவரது மகன் ஸ்டாலின் லண்டனுக்கு அடிக்கடி செல்கிறாரே? ஹாங்காங் செல்கிறாரே? அவருக்கு என்ன நோய்? இதனை கருணாநிதி தெரிவிப்பாரா?எங்கள் அம்மாவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. அவர் ‘மக்களுக்காக நான். மக்களால் நான்’’ என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறார். மக்கள் நலனைப் பற்றியே ஓயாது சிந்தித்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத மாபெரும் மகாசக்தியாக இருக்கிறார். வரும் 2016 தேர்தலில் அம்மா அமோக வெற்றி பெறுவார். என்றென்றும் அம்மாதான் முதல்வர்.இவ்வாறு அமைச்சர் பா.வளர்மதி பேசினார்.
இந்த கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு எவர்சில்வர் குடங்கள், வேட்டி, சேலை ஆகியவைகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
கூட்டத்தில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், சிறுபான்மை பிரிவு துணை செயலாளரும் ‘சிட்கோ’ தலைவருமான ஜே.சி.டி.பிரபாகர் எம்.எல்.எ., ஜெயவர்த்தன் எம்.பி., தலைமை கழக பேச்சாளர்கள் விழுப்புரம் செல்வராஜ், ஏ.நூர்ஜகான் எம்.சி., மாவட்ட கழக பொருளாளர் தி.நகர் கோ.சாமிநாதன், எம்.ஜி.பாஸ்கர், ஆர்.ராஜேந்திரபாபு, சொ.கடும்பாடி, கே.தேவகி, எம்.வி.பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ்.அண்ணாமலை, எம்.ஜி.ஆர். நகர் பாஸ்கர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பெசன்ட் நகர் நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுபக்கர் மற்றும் 131–வது வட்டம் (கிழக்கு) ராணி அண்ணாநகர் டி.கோவிந்தன், பொன்னி பி.தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.