எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கருணாநிதி எத்தனை பொய் பித்தாலட்ட அரசியலில் ஈடுபட்டாலும் முதலமைச்சர் ஜெயலலிதாவை அசைக்க முடியாது என்று அமைச்சர் எஸ். கோகுல இந்திரா பேசினார்.
ஜெயலலிதாவுக்கு எப்போதுமே வெற்றி தான் என்றும் அவர் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பெற்ற அமோக வெற்றி, அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அண்ணா நகர் பகுதி எம்.எம்.டி.ஏ. காலனியில் அண்ணா நகர் பகுதி கழக செயலாளர் ஏ.இ.வெங்கடேசன் எம்.சி. தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் எஸ். கோகுல இந்திரா பேசியதாவது:–
முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வாரு வீட்டிலும் ஏதேனும் ஒரு வகையில் ஒரு திட்டம் சென்றடைந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழகமும் அம்மாவிடம் அன்பு காட்டி அம்மாவின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் அம்மா தீர்க்க தரிசனமாக ஒரு முடிவு எடுத்து தனித்து போட்டியிட்டார். அதன் காரணமாக கழக தொண்டர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளாகவும், மேயராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி தலைவர் வரவேண்டும் என முடிவோடு தனித்து கழகத்தை போட்டியிட்ட வைத்தார். 95 சதவீதம் கழகத்தினர் பொறுப்பில் வந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கழகம் ஒரு பெரும் சக்தியாக விளங்குகிறது.
முல்லைப்பெரியார் நீர்மட்டம் உயர்த்தவும், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய பங்கை பெறவும், அம்மா ஒவ்வொரு நாளும் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டும், விடாது முயற்சித்தும் தமிழகத்தின் உரிமை காப்பாற்றப்பட்டது. மதுரையில் முல்லைப் பெரியார் தொடர்பான கூட்டத்திற்கு அம்மா மதுரைக்கு வந்து விட்டு திரும்பமுடியாது என்று அழகிரி கொலை மிரட்டல் விட்ட போது, வீரத்திருமகளாக அம்மா வீரமுடன் மதுரையில் பேசிவிட்டு திரும்பினார். ஆனால் அழகிரி காணாமல் போனார்.
அம்மா மக்கள் பக்கம் உள்ளார். மக்கள் அம்மா மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் அம்மா மீது அன்பு வைத்துள்ளார்கள். அம்மா மீது பாசம் வைத்துள்ளார்கள். இதன் காரணமாக அம்மா ஒரு முடிவெடுத்தார். பாராளுமன்ற தேர்தலுக்கு தைரியமாக தனித்து போட்டியிடும் முடிவெடுத்து ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியாக சென்று கழக அரசின் சாதனைகளையும், தீயசக்தி கருணாநிதியின் துரோகங்களையும், காங்கிரஸ் செய்த துரோகங்களை பட்டியலிட்டும், மக்களிடம் விளக்கினார். அதன் காரணமாக 37 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றன. இதன் காரணமாக துணை சபாநாயகர் பொறுப்பு கழகத்திற்கு கிடைத்தது. இது அம்மாவின் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். கருணாநிதி கஜானாவை காலி செய்து விட்டுச்சென்ற போதும், ஆட்சி பொறுப்பு ஏற்ற அம்மா விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம், ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் என திருமண உதவித்திட்டம், சைக்கிள், லேப்டாப், பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, புத்தகம், காலணி என பல்வேறு நலத்திட்டங்களை அம்மா நிறைவேற்றியுள்ளார்.
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வீரருக்கு அவரது உடல் சொந்த மண்ணுக்கு வருவதற்குள், அம்மா அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை உடனடியாக வழங்கினார்.
அம்மா மெட்ரோ ரெயில் துவக்கி வைத்தார். அதனை கருணாநிதியால் தாங்க முடியவில்லை. ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை. அம்மா 2003ல் விரிவான திட்டங்கள் தீட்டி விவரமான அறிக்கை அம்மா அரசு தயாரித்தது. 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 3 சதவீதம் வேலை முடிந்தது. 4 ஆண்டு அம்மா ஆட்சியில் 73 சதவீதம் முடிந்து ஆலந்தூர் வரை ரெயில் விடப்பட்டது.
மத்திய அரசு நிதி தரவில்லை
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சரியாக நிதியை பகிர்ந்து கொடுக்கவில்லை. எல்லா துறைகளிலும் நிதி சரியாக கொடுக்கவில்லை. கைத்தறி நெசவாளர்களுக்கு மாநில அரசின் பங்கு உடனடியாக கொடுக்கப்படுகிறது. மத்திய அரசு தரவேண்டிய பங்கு 2 வருடங்களாக கொடுக்கவில்லை. எல்லா துறைகளிலும் இந்த நிலைமை உள்ளது. அம்மாவின் சோதனை காலத்தில் தமிழகத்தில் காலூன்ற பாரதீய ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், தமிழகத்தில் முயற்சி பலிக்காக செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர் கூட்டம் அம்மா தலைமையில் நடைபெற உள்ளது. அம்மா அவர்கள் ஆட்சியில் தான் தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் வந்துள்ளன. தொழில் முதலீடுகள் குவிந்துள்ளன.
தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட தனி இடங்கள் உருவாக்க அம்மா திட்டம் தீட்டி அறிவித்துள்ளார். விலைவாசி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அரசு போக்கு வரத்து வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.
கருணாநிதி கனவு பலிக்காது
மக்களை குழப்பி ஆட்சி பொறுப்பில் வர தீயசக்தி கருணாநிதி முயற்சிக்கிறார். ஒரு நாளும் தி.மு.க. ஆட்சி வராது. மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அம்மா தான் முதல்வர் ஆவார். அம்மாவுக்கு தான் வெற்றி. இன்று மட்டுமல்ல. என்றும் அம்மாவுக்கு தான் வெற்றி. இந்திய திருநாட்டின் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழைகத்தை ஆளும் முதல்வர் அம்மா பாரதத்தின் சக்தியாக விளங்குவார் என்பது உறுதி இவ்வாறு அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேசினார்.
மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி. தென்சென்னை வடக்கு மாவட்ட கழகு செயலாளர் வி.பி.கலைராஜன், பாண்டுரங்கன், எஸ்.அமீர்பாஷா எம்.சி., வ.சுகுமார்பாபு எம்.சி. டி.தசரதன், ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல், முரளிகிருஷ்ணபிரசாத், பி.எல்.இராதாகிருஷ்ணன், கே.வெங்கடேசன், நா.ரா.பாபு, மல்லிகாகந்தன் எம்.சி., என்.ரவிச்சந்திரன், பக்தவத்சலம், கூடல் வே.கோவிந்தன், சடையன், கோ.தமிழ்செல்வம், கே.வசந்தகுமார், கே.குப்பன், கோ.செழியன், மு.ஸ்ரீராமன், ரங்கராஜன், வி.பாலசுந்தரம், பேப்பர் கடை பன்னீர்செல்வம், ஏ.இராஜேந்திரன், அனிஷ்பாபு, எஸ்.ராமு, ஆர்.கணேஷ், ஜி.டி.வெங்கடேசன், கே.புருஷோத்தமன், ஷாஜகான், பலராமன், அப்பன்ராஜ், சண்முகம், ஜி.புருஷோத்தமன், குசேலன், கார்த்திகேயன், நித்தியகுமார், பி.தீனன், நாசர். மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமீம் அன்சாரி, ஏ.எஸ்.பச்சையப்பன், கே.முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.