முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

சென்னை, ஆயிரத்து இருநூறு படங்களுக்கு இசையமைத்து திரையுலக வரலாற்றில் நீங்காத இடம்பிடித்து, இன்று சென்னையில் காலமான 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டரில், அவர் வெளியிட்டுள்ள இரங்கலில் '.எம்.எஸ்.விஸ்வநாதனின் மரணம் துரதிர்ஷ்டவசமானது, இசைப் பிரியர்களுக்கு இது மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது இசையில் உருவான பாடல்களை தலைமுறைகளை கடந்தும் மக்கள் ரசித்து, மகிழ்ந்துள்ளனர். சமகாலத்து இசையை தாண்டி தனது நவீனமயமான இசையின் மூலம் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த அவரது மறைவால் வாடும் குடும்பத்தார் மற்றும் ஏராளமான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து