முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு: கவர்னர் .ரோசய்யா இரங்கல்

புதன்கிழமை, 15 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

சென்னை, தமிழக கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானதை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். ஆரம்பத்தில் தமிழ் சினிமா உலகில் அலுவலக பையனாக பணியில் நுழைந்த எம்.எஸ்.வி. திரைப்படங்களுக்கு இசையமைத்து, அதிலுள்ள கடினமான நுட்பங்களையும் அறிந்து, தமிழ் திரைப்பட இசை உலகில் உச்சாணியை அடைந்தார். இவருடைய மறைவு தமிழ் திரைப்பட இசை உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. இசை உலகில் அவர் ஒரு குருவாக இருந்ததுடன், தமிழ் திரை உலகிற்கு தத்துவஞானியாகவும், ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்ததுடன், பல சிறந்த இசை பிரபலங்களையும் உருவாக்கி உள்ளார். எம்.எஸ்.வி, யின் மறைவுக்கு அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆத்மா இறைவனுடைய திருநிழலில் இழைப்பார எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள கோதாவரி ஆற்றில் நடந்த மகா புஷ்கராம் திருவிழாவில் 27 பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததற்கும் இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து